இலங்கையில் அபிவிருத்தி திட்டமிடல் சுற்றாடல் கவனங்களை ஒருங்கிணைப்பதற்கான நோக்கத்திற்காக வினைத்திறன்மிக்க கருவியொன்றாக சுற்றாடல் தாக்க மதிப்பீட்டின் முக்கியத்துவம் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சு.தா.மதிப்பீடானது ஆரம்ப கட்டத்தில் சுற்றாடல் மீதான குறிப்பிட்ட கருத்திட்டத்தின் ஏற்படக்கூடிய தாக்கங்களை மதிப்பிடுவதற்கு உதவுகின்றது. அது ஏற்றுக் கொள்ள முடியாத தாக்கங்களை தணிப்பதற்கும், கருத்திட்டத்தை வடிவமைப்பதற்கும் நிதியளிப்பதன் மூலம் உள்ளூர் சுற்றாடலுக்கு பொருத்தமானதாக அமைக்கின்றது. கருத்திட்டங்கள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அது உத்தியோகத்தர்களுக்கு உதவுகிறதோடு கருத்திட்ட கூறுகள் அவற்றின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைவதற்கும் உதவுகிறது. இந்த வைகயில் சு.தா. மதிப்பீடானது பிரதானமாக திட்டமிடல் கருவியொன்றாகவும் பேணிதகு அபிவிருத்தியை அடைவதற்கான முக்கிய உத்திகளில் ஒன்றாகவும் கருதப்பட முடியும்.
சுற்றாடல் தாக்க மதிப்பீடானது, தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் ஏனைய சில சட்டங்களின் கீழ் இலங்கையில் அபிவிருத்தி கருத்திட்டங்களின் தாபிப்பதற்கு கட்டாயமான தேவைப்பாடொன்றாக மாறியுள்ளது.
இலங்கையில் சு.தா. மதிப்பீட்டிற்கான சட்டம், கொள்கை, மற்றும் நிறுவனங்களின் ஏற்பாடுகள்
ம.சு. அதிகாரசபையுடன் பதிவு செய்த சு.தா.ம. ஆலோசகர்களின் பட்டியல்
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




