SinhalaSriLankaEnglish (UK)

சுற்றாடல் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் (CEA) தொடர்பான பொதுமக்கள் முறைப்பாடுகள்

2008/01/28 ஆம் திகதிய  1533/16 ஆம் இலக்க வர்த்தமானியில்; வெளியிடப்பட்ட ‘ஏ’ மற்றும் ‘பி’ வகை செயற்பாடுகளின் கீழ் வருகின்ற சுற்றாடல் மாசுறுதல் பற்றிய முறைப்பாடுகள் எமக்கு அறிக்கை செய்யப்படல் வேண்டும். திருத்தப்பட்டவாறு 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ம.சு.அதிகாரபையின் அதிகாரத்தின் கீழ் வராத ஏனைய முறைப்பாடுகள் பற்றி அலசி ஆராய்வதற்கு ம.சு.அ. முடியுமான நிலையில் இல்லை என்பதை தயவு செய்து கருத்திற்கொள்க. ம.சு.அதிகாரசபையின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற சுற்றாடல் முகாமைத்துவம் விடயங்கள் பற்றிய மாசுறுதல் சம்பவங்களும், முறைப்பாடுகளும் நிகழ்வு இடம்பெற்ற ம.சு.அ. சபையின் தொடர்புடைய மாகாண/ மாவட்ட அலுவலகங்களுக்கு முதலில் அறிக்கை செய்யப்படல் வேண்டும். நீங்கள் மாகாண/ மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் போது விடயம் ஆராய்வு செய்யப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து  உங்களுக்கு அறிவிக்கப்படும்.

உள்ளூர் அதிகாரசபையிளால் தீர்க்கப்படக்கூடியதான விடயங்கள் யாவை ?

2008/01/25 ஆம் தேதியிட்ட  1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறவித்தலினால் வெளியிடப்பட்ட “சி” வகை செயற்பாடுகளின் கீழ் வருகின்ற அவற்றின் தொழிற்பாட்டு பகுதிகளிலுள்ள சுற்றாடல் முகாமைத்துவ விடயங்கள் மற்றும் மாசுறுதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஆராய்வதற்கும் தீர்த்து வைப்பதற்கும் உள்ளூராட்சி சபைகளுக்கு (மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள்) அதிகாரமளிக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளூர் அதிகாரசபையின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற சுற்றாடல் விடயமொன்று தொடர்பில் நீங்கள் உரிய அதிகாரசபைக்கு முறைப்பாடொன்றை செய்கின்றபோது உங்களது முறைப்பாட்டுக்கு உள்ளூர் அதிகாரசபை பதிலளிக்க தவறுமாயின், அத்துடன் சுற்றாடல் மாசுறுதல் பிரச்சினை தொடர்ந்தும் இருக்குமாயின் குறிப்பிட்ட மாகாணத்தில் உள்ளூர் உள்ளூராட்சி ஆணையாளரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். உள்ளூர் அதிகாரசபைக்கும் உங்களுக்கும் இடையிலான அனைத்து கடித தொடர்புகளின் பிரதிகளும் உங்களுக்கு முறைப்பாட்டின் விபரங்களுடன் உள்ளூர் அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

உங்களுக்கு உதவ முடியுமான ஏனைய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் யாவை?

 

முறைப்பாட்டின் தன்மை

எங்கு முறைப்பாடுசெய்தல்/ பொறுப்புவாய்ந்த நிறுவனம்

01.

மண் அகழ்தல், கல் உடைத்தல் மற்றும் நிலத்தை தோண்டுதல் போன்ற அகழ்வு நடவடிக்கைகள்

புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு பணியகம் (GSMB)

02.

தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைத்தல்

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC)

03.

காணிகளை நிரப்புதல்

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (SLRDC)

04.

வனசீவராசி மற்றும் வாழ்விட பாதுகாப்பு விடயங்கள்

வனசீவராசிகள் திணைக்களம்

05.

முதலீட்டு சபை அங்கீகரித்த தொழில்துறைகளுக்கான தொடர்புடைய ஏதாவது முறைப்பாடுகள்

முதலீட்டு சபை (BOI)

06

கரையோரம் தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள்

கரையோர பாதுகாப்பு திணைக்களம்

07.

வயற்காணிகளை நிரப்புதல்

கமநல சேவைகள் ஆணைக்குழு

08.

மாநகர கழிவுளை கொட்டல்

உள்ளூர் அதிகாரசபைகள்

உங்களது முறைப்பாட்டை எங்களுக்கு எழுத்து மூலமாக அறியத்தருவது விரும்பத்தக்கது. உங்களது தொலைபேசி முறைப்பாட்டை தொடர்ந்து முறைப்பாட்டு படிவத்துடன் எழுத்து மூலமான முறைப்பாட்டை செய்வீர்களாயின் அது எமக்கு வினைத்திறனுள்ள, விரிவான விசாரணயொன்றை செய்வதற்கு உதவியாக அமையும்.

அனாமதேய முறைப்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்பதை தயவு செய்து கவனிக்கவும். பல விடயங்களில் குறைவான அல்லது தெளிவற்ற விதத்தில் வழங்கப்பட்ட விபரங்கள் விசாரணயை மிகவும் வினைத்திறன் அற்றதாகவும், சிலவேளைகளில் சாத்தியம் அற்றதாகவும் ஆக்கி விடுகின்றன. மேலும் முறைப்பாட்டாளரின் விபரங்கள் போதாமை என்பதன் மூலம் நாம் கருதுவது யாதெனில், ம.சு.அதிகாரசபையின் விசாரணயை மீள உங்களுக்கு அறிக்கை செய்ய முடியாது என்பதாகும்.

எவ்வாறாயினும், நீங்கள் விரும்புகின்றபோது உங்களது பெயரும் தொடர்பு விபரங்களும் இரகசியமானதாக பேணப்படும் என்பதோடு, அது மதிக்கப்பட்டு ஏனையோருக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது.

Monday, 08 May 2023 10:47 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

 

 nir

2026-03-19-PRESIDENTIAL-ENVIRONMENTAL-AWARDS-2026

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்