|
திரு. ஆண்டன் ஜெயக்கொடி, சுற்றுச்சூழல் துணை அமைச்சர்
|
|
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்
|
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ம.சு.அ. உறுதிப்படுத்திய “குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள்” எனும் பட்டியலினுள் கருத்திட்ட பிரேரணைகள் வருகின்றதா அல்லது 1993.06.24 ஆம் திகதிய 772/22, 1995.02.23 ஆம் திகதிய 859/14, 1999.11.06 ஆம் திகதிய 1104/22, மற்றும் 1999.11.29 ஆம் திகதிய 1108/1 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுடன் தொடர்புடையதா என்பதை கருத்திட்டத்தை முன்மொழிபவர் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ம.சு.அ. மேற்படி தீர்மானத்திற்காக ம.சு.அதிகாரசபைக்கு கருத்திட்டத்தின் அத்தியாவசிய தகவல்கள் சமர்ப்பிப்பதற்காக அடிப்படை தகவல் வினாக்கொத்தொன்று கருத்திட்ட முன்மொழிவாளருக்கு வழங்கப்படும் (ம.சு.அதிகாரசபை தலைமை அலுவலகத்தின் சு.தா.ம. அலகு அல்லது ம.சு.அ. மாகாண/ மாவட்ட அலுவலகங்களில் இருந்து அடிப்படை தகவல் வினாக்கொத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதனை ம.சு.அ. இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.) கருத்திட்டமானது சு.தா.ம. / ஆ.சு.ப. ஆகியவற்றை தேவைப்படுத்துகின்ற குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டமொன்றாக இருப்பின், ம.சு.அதிகாரசபையானது சு.தா.ம./ ஆ.சு.ப. செயற்பாட்டை நிருவகிப்பதற்கான பொருத்தமான கருத்திட்ட அங்கீகார முகவராண்மையை தீர்மானிக்கும். சு.தா.ம/ அ.சு.ப. ஒன்றினை தயாரிப்பதில் கருத்திட்ட அங்கீகார முகவராண்மை கருத்திட்ட முன்மொழிவாளரை வழிப்படுத்தும்.
கருத்திட்டமானது கரையோர வலயத்தினுள் அமைவதானால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை கருத்திட்ட முன்மொழிவாளர் தொடர்பு கொள்ளல் வேண்டும்.
கருத்திட்டமானது தேசிய ஒதுக்குகள் ஒன்று காணப்படுகின்ற எல்லையினது ஒரு மைல் பரப்பினுள் காணப்படுமாயின், கருத்திட்ட முன்மொழிவாளர் வனசீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளுதல்…
அபிவிருத்தியின் ஆரம்பத்தில் சுற்றாடல் தாக்கங்களைஅடை- -யாளங்காணுதலும் தணித்தலும்...
உங்களது புதிய கைத்தொழிலை இடப்படுத்துவதற்கு எமது சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளுங்கள்...
நீர்த் தரம், வளித் தரம் மற்றும் ஒலி, அதிர்வு அளவீடுகள் நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது...
சுற்றாடல் தொடர்பான விடயங்களில் பொதுமக்களின் முறைபாடுகளைத் தீர்த்தல்...
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999