சுற்றாடல் அமைச்சர் திரு.ஜனக வக்கம்புரவின் செய்தி
|
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் திரு.வேணுர பெர்னாண்டோவின் செய்தி
சுற்றாடல் ஒழுங்குறுத்தலுக்காக இலங்கையில் இயங்கிவருகின்ற மேலும் வாசிக்க
|
பணிப்பாளர் நாயகத்தின் ஆசிச் செய்தி மானிட வர்க்கத்திற்கும் சுற்ற........ |
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பின்னணி
தொழில்துறை என்பது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியை அளிக்கின்ற, இலங்கைக்கு பெறுமதிமிக்க பொருளாதார, சமூக நன்மைகளை வழங்கி, பேணத்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கொன்றை ஆற்றுகின்றது. எவ்வாறாயினும் பல தொழில்துறை செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள ஆபத்துமிக்க இரசாயண பொருட்களுடன் மூலமான விபத்துக்கள், தீப்பற்றுதல், வெடிப்புகள் என்பன மக்களுக்கும் சுற்றாடலுக்கும் உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.
இரசாயன விபத்து தடுப்பு, மற்றும் இலங்கைக்கான தயார் நிலை நிகழ்ச்சித்திட்ட கருத்திட்டமானது (CAPP-SL) சர்வதேச இரசாயனங்கள் முகாமைத்துவத்திற்கான உபாயமுறை அணுகுமுறை (SAICM) இன் நிதி ஆதரவுடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம் (UNEP) நிறைவேற்று முகவராண்மையாக இருப்பதோடு, தாய்லாந்து, பெங்கொக்கை தளமாக கொண்டு இயங்கும் ஆசிய அனர்த்த தயார்நிலை நிலையம் தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது.
நோக்கம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான பல்வேறு அரசாங்க முன்னெடுப்புகளுடன் இலங்கையின் இரசாயன தொழில்துறை துரிதமாக விரிவடைந்து வருகிறது. இந்த கருத்திட்டமானது CAPP நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான உபாயமுறையொன்றை உருவாக்குவதை நோக்காக கொண்டுள்ளது. இது இரசாயன விபத்துக்களை தடுப்பதற்கும் ஏற்படக்கூடிய விபத்துக்களின் தாக்கங்களை வரையறை செய்யவும் உதவுகின்றது. அதன்மூலம் மக்களுக்கான தீங்கையும் சுற்றாடல் சொத்துக்களுக்கான தீங்கையும் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழியமைக்கின்றது.
குறிக்கோள்கள்
இரசாயன விபத்து தடுப்பு மற்றும் தயார் நிலை தொடர்பான விடயங்களின் புரிந்துணர்வை அதிகரித்தல் (CAPP).
இரசாயன விபத்துக்களின் ஆபத்துக்களுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கையினுள் தொடர்புடைய நிறுவனங்கள், முகவராண்மைகள், நிபுணர்களின் ஆற்றல்களை மேம்படுத்துதல்.
இரசாயண விபத்து ஆபத்துகள், தீங்குகளின் தன்மை, அமைவிடத்தை அடையாளங் காணுதல்.
ஏற்படக்கூடிய எந்தவொரு விபத்தினதும் மோசமான தாக்கங்களை குறைப்பதற்கும் இரசாயன கசிவு, நெருப்பு அல்லது வெடிப்பு என்பவற்றை தணித்து பதிலான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ளுதல்.
இலங்கைக்கு அதன் தேவைகள் மற்றும் ஆற்றல்களை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட பொருத்தமான CAPP நிகழ்ச்சித் திட்டமொன்றை விருத்தி செய்து நடைமுறைப்படுத்தல்.
கருத்திட்ட செயற்பாடுகள்
கருத்திட்டத்தின் தற்போதைய செயற்பாடுகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய அங்குரார்ப்பன செயலமர்வு பத்தரமுல்ல வோடர்ஸ் எட்ஜ் இல் 2013 சனவரி 17 ஆம் திகதியன்று நாட்டில் இரசாயண விபத்து தடுப்பு மற்றும் தயார்நிலையில் தொடர்புடைய அனைத்து பங்காளர்களினதும் பரவலான பிரதிநிதித்துவத்துடன் இடம்பெற்றது. CAPP செயலணி தாபிக்கப்பட்டு நாட்டு நிலைமை அறிக்கை, வீதி வரைபடம் என்பவற்றை தயார் செய்தல் உள்ளிட்ட முன்னைய கருத்திட்டத்திற்கு அவர்கள் பொறுப்பாக இருக்கவும் செயலமர்வில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ம.சு.அ. கருத்திட்டத்தின் அடுத்த கட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக செயலணிகள் அங்கத்துவர்களை தெரிவு செய்தது. செயலணியானது தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி சார் நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. எதிர்வரும் கருத்திட்ட செயற்பாடுகள்:
செயலணிக்கான முதலாவது பயிற்சி அமர்வு
நாட்டு நிலைமை அறிக்கையை விருத்தி செய்தல்
CAPP நிகழ்ச்சித்திட்டத்திற்கான தேவை மதிப்பீடு, வீதி வரைபடம் என்பவற்றினை விருத்தி செய்தல்
பிரதான பன்முக பங்காளர்களுக்கான இரண்டாவது பயிற்சி அமர்வு
CAPP அங்குரார்ப்பண செயலமர்வு
சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளுதல்…
அபிவிருத்தியின் ஆரம்பத்தில் சுற்றாடல் தாக்கங்களைஅடை- -யாளங்காணுதலும் தணித்தலும்...
உங்களது புதிய கைத்தொழிலை இடப்படுத்துவதற்கு எமது சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளுங்கள்...
நீர்த் தரம், வளித் தரம் மற்றும் ஒலி, அதிர்வு அளவீடுகள் நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது...
சுற்றாடல் தொடர்பான விடயங்களில் பொதுமக்களின் முறைபாடுகளைத் தீர்த்தல்...
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999