SinhalaSriLankaEnglish (UK)

மாண்புமிகு பிரதி அமைச்சரின் செய்தி

இலங்கை உலகில் உயிர்ப்பன்வகைமை நிறைந்த ஒரு நாடாகும். வனங்கள், வன விலங்குகள் மற்றும் சூழற்றொகுதிகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை அமுலாக்குதலைப் போன்றே மக்கள் பங்கேற்பினை கட்டியெழுப்புவதையும் விசேடமாக மேற்கொள்ளவேண்டும்.

சட்டத்தின் பிரகாரம் எற்கெனவே பேணல் வலயங்களாக பிரகடனஞ் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களைப் பாதுகாத்தல், அச்சுறுத்தலை எதிர்நோக்கி உள்ள வலயங்களை இனங்கண்டு அவற்றைப் பாதுகாத்தல், காட்டுயானைகளின் அச்சுறுத்தல்களை முகாமை செய்தல், காலநிலை மாற்றங்களின் காரணமான வரட்சி, காட்டுத் தீ, வௌ்ளப் பெருக்கு, சூறாவளி, புயல், கடலரிப்பு போன்ற பலவகையான அனர்த்தங்களை குறைப்பதைப் போன்றே கழிவுப்பொருட்களை உள்ளிட்ட பல்வேறு சுற்றாடல் மாசுபாட்டு நிலைமைகளைக் கட்டுப்படுத்துதல், இயற்கைச் சூழற்றொகுதிகளைப் பாதுகாத்து நிலைத்திருக்கவல்ல அபிவிருத்தியை ஏற்படுத்துதல் என்பவை எம்மெதிரில் உள்ள சவால்களாகும்.

அதிமேதகு சனாதிபதியவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய சுற்றாடல் கொள்கையின் வழிநின்று செயலாற்றி மேற்படி சவால்களை வென்றெடுத்து தாய்நாட்டையும் இயற்கையையும் நிலைபேறான தன்மையையுளம் உறுதிப்படுத்த ஒன்றிணைவோமாக.

 



பிரதி அமைச்சர்
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு

Wednesday, 09 October 2019 09:09 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்